புறநானூறு 134 : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
கடையேழு வள்ளல்களில் ஒருவரான 'ஆய் அண்டிரன்' குறித்து 'உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்'. இப்பிறவியில் செய்தது மறுபிறவியில் நன்மை பயக்கும் என்று அறத்திற்கு விலை வைத்திடும் வணிகன் அல்ல எம் தலைவன் 'ஆய் அண்டிரன்'. மற்றவர்களும் சான்றோரும் செய்தார்கள் என்பதற்காகவோ வள்ளல் தன்மை காட்டுவதற்காகவோ அவன் கொடுப்பதில்லை. [ பிறர் துன்பம் காணச் சகிக்காது எப்பலனும் எதிர்பாராது உள்ளமுவந்து கொடுப்பான் ]