Posts

Showing posts from April 5, 2021

நாலடியார் 120 :

ஆராய்ந்து பார்த்தால் மரணத்தின் பொழுது ஒருவன் தான் செய்த செயலின் புகழ் அல்லாது வேறொன்றை எடுத்துச் செல்வதில்லை. போற்றி வளர்த்த உடலும் பயனற்றது தான்.

குறுந்தொகை 399 : பரணர்

ஊருக்கு நீர்வழங்கும் குளத்தின் மேற்பரப்பில் போர்த்தியிருக்கும் பாசி போன்றது 'பசலை' என்னும் இக்காதல் நோய். காதலன் தொடும்பொழுதெல்லாம் நீங்கி, அவர் என்னை விட்டு விலகிச் செல்லும் போதெல்லாம் மீண்டும் பரவுகின்றதே ....