நற்றிணை 217 : கபிலர்
புகழ் பெற்று வாழ்பவரின் செல்வத்தைப் போலக் காணுமிடத்திலெல்லாம் ஒளிரும் யானை, கருமையான வலிய புலியென அஞ்சி அருகிலுள்ள கரும் பால் வடியும் வேங்கை மரத்தில் விரைவாய் முட்டிமோதி மயங்கித் தன் சினம் தணிக்கும். நம் மலையரசன் மிக இனிமையானவன் தான் என்றாலும் அவன் அச்சப்படும் வகையில் பொய்க்கோபம் கொண்டு ஊடல் கொள்வேன் தோழி.