நாலடியார் 17 :
தோட்டத்தில்
பயன் தந்த மரங்களெல்லாம் பனிகாலத்தில் பழங்களை இழந்து பட்டுப்போவதைப்
போன்றது இளமை. வேல் போன்ற கூரிய விழியாள் என்று நீ இவளை மிகவும்
விரும்பினால் , ஒரு நாள் இவளும் கண் தெரியாமல் ஆகிச் சிறுகோலின் உதவியுடன்
நடந்து செல்லும் கிழவியாகும் காலமும் வரும் . இளமையும் அழகும் நிலையற்றது
...
நாலடியார் 17
பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோற்கண்ணள் ஆகும் குனிந்து ....
Comments