நாலடியார் 17 :

தோட்டத்தில் பயன் தந்த மரங்களெல்லாம் பனிகாலத்தில் பழங்களை இழந்து பட்டுப்போவதைப் போன்றது இளமை. வேல் போன்ற கூரிய விழியாள் என்று நீ இவளை மிகவும் விரும்பினால் , ஒரு நாள் இவளும் கண் தெரியாமல் ஆகிச் சிறுகோலின் உதவியுடன் நடந்து செல்லும் கிழவியாகும் காலமும் வரும் . இளமையும் அழகும் நிலையற்றது  ...


நாலடியார் 17

பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம் 

கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும் 

வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் 

கோற்கண்ணள் ஆகும் குனிந்து ....


Comments