நற்றிணை 217 : கபிலர்

புகழ் பெற்று வாழ்பவரின் செல்வத்தைப் போலக் காணுமிடத்திலெல்லாம் ஒளிரும் யானை, கருமையான வலிய புலியென அஞ்சி அருகிலுள்ள கரும் பால் வடியும் வேங்கை மரத்தில் விரைவாய் முட்டிமோதி மயங்கித் தன் சினம் தணிக்கும். நம் மலையரசன் மிக இனிமையானவன் தான் என்றாலும் அவன் அச்சப்படும் வகையில் பொய்க்கோபம் கொண்டு ஊடல் கொள்வேன் தோழி.

நெடிய தனிமையென்னும் வேலியை முழுமையாக நீக்கி, அவன் என்னை அணைக்கும் பொழுதினில் சற்று விலகி அவனுக்கும் அதை உணர்த்துவேன்  

நற்றிணை 217

இசை பட வாழ்பவர் செல்வம் போலக் 

காண் தொறும் பொலியும் கதழ் வாய் வேழம் 

இருங் கேழ் வயப் புலி வெரீஇ அயலது

 கருங் கால் வேங்கை ஊறுபட மறலி 

பெருஞ் சினம் தணியும் குன்றநாடன் 

நனி பெரிது இனியனாயினும் துனி படர்ந்து 

ஊடல் உறுவேன் தோழி நீடு 

புலம்பு சேண் அகல நீக்கி 

புலவி உணர்த்தல் வன்மையான

Comments