நற்றிணை 217 : கபிலர்
புகழ் பெற்று வாழ்பவரின் செல்வத்தைப் போலக் காணுமிடத்திலெல்லாம் ஒளிரும் யானை, கருமையான வலிய புலியென அஞ்சி அருகிலுள்ள கரும் பால் வடியும் வேங்கை மரத்தில் விரைவாய் முட்டிமோதி மயங்கித் தன் சினம் தணிக்கும். நம் மலையரசன் மிக இனிமையானவன் தான் என்றாலும் அவன் அச்சப்படும் வகையில் பொய்க்கோபம் கொண்டு ஊடல் கொள்வேன் தோழி.
நெடிய தனிமையென்னும் வேலியை முழுமையாக நீக்கி, அவன் என்னை அணைக்கும் பொழுதினில் சற்று விலகி அவனுக்கும் அதை உணர்த்துவேன்நற்றிணை 217
இசை பட வாழ்பவர் செல்வம் போலக்
காண் தொறும் பொலியும் கதழ் வாய் வேழம்
இருங் கேழ் வயப் புலி வெரீஇ அயலது
கருங் கால் வேங்கை ஊறுபட மறலி
பெருஞ் சினம் தணியும் குன்றநாடன்
நனி பெரிது இனியனாயினும் துனி படர்ந்து
ஊடல் உறுவேன் தோழி நீடு
புலம்பு சேண் அகல நீக்கி
புலவி உணர்த்தல் வன்மையான
Comments