நாணுத்துறவுரைத்தல் : தன் காதலைத் தான் விரும்பிய பெண் ஏற்காவிட்டால், இளைஞர்கள் காமநோய் தாங்காது துறவு மேற்கொள்வர். இதற்குப் பெயர் 'மடலூர்தல்'. தன் மீதிருந்த அன்பின் காரணமாக அழகும் இளமையும் உடையவன் துறவியாக அலைவது கண்டு காணச் சகிக்காது, அவன் மீது காதல் கொள்வாள் தலைவி.
அலரறிவுறுத்தல் : முதிர்வில்லாத் துறவாகிய #மடலூர்தல் கொண்டு திரியும் இளைஞன், தான் விரும்பிய பெண்ணின் வீடிருக்கும் தெருவிலே சுற்றிச் சுற்றி வருவான். அவ்வாறு அவன் செல்லும் பொழுது அக்கம்பக்கத்தினர் அவனையும் அப்பெண்ணையும் இணைத்துப் பேசி இளமையும் அழகுமுடையவனின் துறவறத்துக்குக் காரணம் அப்பெண் எனப் பழித்துப் பேசுவர்.