திருக்குறள் அதிகாரம்: 114 காமத்துப்பால் : களவியல் : நாணுத்துறவுரைத்தல்
நாணுத்துறவுரைத்தல் :
தன் காதலைத் தான் விரும்பிய பெண் ஏற்காவிட்டால், இளைஞர்கள் காமநோய் தாங்காது துறவு மேற்கொள்வர். இதற்குப் பெயர் 'மடலூர்தல்'. தன் மீதிருந்த அன்பின் காரணமாக அழகும் இளமையும் உடையவன் துறவியாக அலைவது கண்டு காணச் சகிக்காது, அவன் மீது காதல் கொள்வாள் தலைவி.
#அய்யன் 1131
/ காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி /
தீராக் காமத்தில் மூழ்கி வருந்துபவருக்கு அரண் துறவறமாகும்.உண்மையாக விலக்க நினைப்போருக்கு அதைவிட வலிமையான துணை வேறொன்றுமில்லை.
#அய்யன் 1132
/ நோனா உடம்பும் உயிரும் மடல்ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து /
காம நோயினைப் பொறுக்க முடியாத உடலும் உள்ளமும் துறவு கொண்டு தப்பிக்க முயலும். காமம் பொறுக்காது துறவு என்று ஊர் சிரிப்பதை எண்ணி வெட்கப்பட வேண்டாம். அவ்வெட்கத்தை விலக்கி நிறுத்து.
#அய்யன் 1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
வெட்கமும் நல்ல ஆண்மகனுக்கு உள்ள குணமும் முன்பு பெற்றிருந்தேன். இன்றோ தீராக் காமம் கொண்டோர் கடைசியில் ஏற்கும் துறவறமே என்னிடம் உள்ள ஒரே வழி.
#அய்யன் 1134
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை
காமம் என்னும் பெருவெள்ளத்தில் வெட்கம் மற்றும் நல்ல ஆண்மைகுணம் என்னும் படகு அடித்துச் செல்லப்படும். இனித் துறவறம் மட்டுமே துணை.
#அய்யன் 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்
அங்கு பூப்பந்து விளையாடும் சிறுவளையல் அணிந்தவள் எனக்கிங்கு பரிசளித்தாள் துறவுடன் காமத்துன்பம் அழுத்தும் இரவு.
#அய்யன் 1136
மடல்ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்குஎன் கண்
என்னோடு வாழ்வில் துணைசேர விரும்பாத பெண் தரும் காமத் துன்பத்திற்கு மாற்றாகத் துறவு மேற்கொள்வதைப் பற்றி நடுசாமத்திலும் எண்ணிக்கொண்டிருப்பேன்.
#அய்யன் 1137
கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்
கடல் போன்ற காமம் அழுத்தியும் துறவு கொள்ளாத பெண்களை விடப் பெரியது இவ்வுலகில் இல்லை.
#அய்யன் 1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறைஇறந்து மன்று படும்
நிறைந்த அழகும் நிலைத்த அன்பும் உடைய என் ஆருயிர்த் தலைவன் என் மீது கொண்ட காதல், அவர் மேற்கொண்ட துறவை மீறி சபையில் வெளிப்பட்டுவிடும்.
#அய்யன் 1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு
காதற் தோல்வியால் துறவு மேற்கொண்ட எனது மனதில், யாரும் அறியவில்லை என்று காமம் மீண்டும் மெல்ல அரும்பும் .
#அய்யன் 1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு
என்னைக் கண்ணில் கண்டாலே சிரிப்பார்கள் அறிவில்லாதவர்கள். நான் படும் காமத்துன்பமும் மடலூர்தலும் அறியாது.
Comments