திருக்குறள் அதிகாரம்: 110 காமத்துப்பால் : களவியல் : குறிப்பறிதல்
குறிப்பறிதல் :
தான் விரும்பும் பெண்ணின் கண்களில் உள்ள குறிப்பை அறிந்து புரிந்துகொள்ளல்
#அய்யன் 1091
/ இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து /
அம்புபோல் இமை திரண்ட விழிகளால் இவள் பார்ப்பது துன்பம் தருவதும், அத்துன்பத்திற்கு மருந்து எனவும் இரண்டுமாக உள்ளது
#அய்யன் 1092
/ கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது /
என்னைக் கொள்ளை கொள்ளும் அவளது ஒரப்பார்வை மிகப் பெரியது. அந்தப் பார்வைக்குச் சரிபாதி கூட ஈடாகாது காமம்
#அய்யன் 1093
/ நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர் /
உள்ளமென்னும் பாத்திரத்தில் கொதிக்கும் நீர்க்குமிழ் போல என்னைச் சட்டென்று பார்த்துவிட்டுத் தலைகுனிந்துவிட்டாள். அது போதும். புரிந்துகொண்டேன்
#அய்யன் 1094
/ யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் /
நான் பார்க்கும் பொழுது நிலத்தைப் பார்க்கும், பாராத பொழுது என்னைப் பார்த்துச் மெல்லச் சிரிக்கும் அவளது குறும்பு கண்கள்
#அய்யன் 1095
/ குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும் /
என்னைப் பார்த்துவிடக் கூடாதே என்று நினைத்தும், பார்க்காதிருக்க முடியாமல் , ஒரு கட்டத்தில் என் தவிப்பைப் போக்க நம்பிக்கை தரும் சிறு பார்வையை வீசிச் சிரிக்கும் அவள் கண்கள்.
#அய்யன் 1096
/ உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும் /
என்னிடத்தில் அவள் பேசுவது யாரோ முன்பின் தெரியாதவரிடத்தில் பேசுவதைப்போலத் தோன்றும். விரைவில் சிந்தித்து உணர்வேன் அவளது சொல்லில் இருந்த அன்பினை
#அய்யன் 1097
/ செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு /
விருப்பமின்றி விலகிச் செல்லும் சொல்லும் , எதிரியைப் போன்ற பார்வையும் , அவளுக்கு என்னை ஆகாது போல மற்றவர்களுக்குத் தோன்றும். ஆனால் அதிலுள்ள காதல் குறிப்பு எனக்கு மட்டுமே புரியும்
#அய்யன் 1098
/ அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும் /
வீட்டிலுள்ளோர் நன்றாக உண்டபின், செறிக்க உலாவச் செல்வர். அப்பொழுது அவளை நான் நிமிர்ந்து பார்க்கச், செழிப்புமிக்கவள் மெல்லச் சிரிப்பாள்.
#அய்யன் 1099
/ ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள /
பொதுவிடத்தில் யாரோ முன்பின் அறியாதவர்கள் போல நடந்துகொள்வது காதலர்களுக்கே உரியது
#அய்யன் 1100
/ கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல /
கண்ணோடு கண் இணைந்து எண்ணம் ஒத்த பின்பு காதலில் சொற்களுக்குப் பயன் இல்லை.
Comments