திருக்குறள் அதிகாரம்: 113 காமத்துப்பால் : களவியல் : காதற்சிறப்புரைத்தல்

காதற்சிறப்புரைத்தல்  : 

தங்கள் காதல் எத்தகையத்து என்றெடுத்துரைக்கும் பாக்கள் ....


#அய்யன் 1121

/ பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர் /

மென்மையாகப் பேசுபவளின் வெண் பற்களால் தடுக்கப்பட்ட உமிழ்நீர், முத்தமிடும் போது பாலேடு கலந்த தேன் என இனிக்கின்றது.

 

#அய்யன் 1122

/ உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு /

உடம்போடு தான் உயிர் , தனித்துப் பொருளில்லை. இடையில் வேறென்ன இருக்க முடியும். அதுபோன்றது என்னவளுக்கும் எனக்கும் உள்ள காதல்.

 

#அய்யன் 1123

/ கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம் /

சிறு காராமணியின் நெற்றியில் முளைக்கும் அரும்பைப் போன்ற பருவே என்னவளைத் தீண்டாதே. நான் முத்தமிடும் சிறப்பு மிக்க நெற்றியில் யாருக்கும் இடமில்லை

* காராமணி ~ தட்டைப்பயறு

 

#அய்யன் 1124
 
/ வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து /
 
நேர்த்தியான உடையணித்தவள் நான் உயிரோடு இருப்பதற்குச் சான்று. நல்ல ஆடைகள் மீது பற்றற்று வெறுத்து நீக்கிவிட்டாள் என்பது என் மரணத்திற்குச் சான்று.

 

#அய்யன் 1125

/ உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
  ஒள்ளமர்க் கண்ணாள் குணம் /  

எந்நாளும் நினைத்துக்கொண்டிருப்பேன். மரணப்படுக்கையிலும் மறக்கமாட்டேன் ஒளிரும் போர்க்களம் போல இன்பம் தரும் கண்களை உடையவளின் காதலை

 

#அய்யன் 1126

/ கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர் /

மிக நுணுக்கமான கண்ணிமை போன்றவர் என் காதலன். கண்ணிற்குள் சென்று துன்பமும் தரமாட்டார், நான் கண்சிமிட்டும் பொழுது தனக்கு ஏற்படும் துன்பத்திற்கு வருந்தவும் மாட்டார். 

 

#அய்யன் 1127

/ கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து /

அவர் விரும்பிய எனது கண்களிலேயே காதலனாய்க் குடியேறியதை அறிந்ததால் இனிக் கண்ணிற்குக் கருப்புமை பூசமாட்டேன்.

#அய்யன் 1128

/ நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து /

என் நெஞ்சத்தில் காதலராய்க் குடியிருக்கின்றார். சூடாக உண்பதற்கு அஞ்சினேன் சூடுசோற்றின் சுவை தெரிந்தும்.

 

#அய்யன் 1129

/ இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர் /

நான் மறந்துபோய் இமையில் கருப்புமை சூடியதற்கு , அவர் என் கண்களிலிருந்து விலகி , நாங்கள் இருவேறாகப் பிரிந்துவிட்டோம் என்று அனைவரிடத்திலும் கதைகட்டும் இவ்வூர்.

 

#அய்யன் 1130

/ உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர் /

என்னுள்ளத்தில் என்றும் அவர் மகிழ்ந்து வாழ்ந்துவருவார். இதையறியாது நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று இகழ்ந்து பேசும் இவ்வூர்.

Comments