திருக்குறள் அதிகாரம்: 111 காமத்துப்பால் : களவியல் : புணர்ச்சிமகிழ்தல்
#அய்யன் 1101
/ கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள /
கண் இன்புற அழகும், செவி இன்புற நல்ல குரலும், முகர்ந்து இன்புற நறுமணமும், நாவின்புற அறுசுவையும், தீண்டி இன்புறத் தேகமும் ஒளிரும் வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளது
#அய்யன் 1102
/ பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து /
நோய்க்கு மருந்து பிற பொருட்கள். ஆனால் நகையும் ஆடையும் அணிந்தவள் ஏற்படுத்தும் நோய்க்கு , அதைக் களைந்து தானே மருந்தாவாள்.
#அய்யன் 1103
/ தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு /
தூக்கத்தில் ஒருவன் தன்னை மறந்து வீழ்ந்து கிடக்கும் அவளின் தோள்களை விடவா இனிது பிரம்மன் படைத்த உலகு.
#அய்யன் 1104
/ நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் /
நெருங்கினால் குளிருவதும் விலகினால் நிலைமாறுவதுமான காம நெருப்பினை உடைய உடலை எப்போது பெற்றாள் இவள் !
#அய்யன் 1105
/ வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் /
வேண்டிய பொழுது பூத் தேன் காய் கனி நிழல் நீர் தென்றல் குளிர்ச்சி ஆகியவை தரும் காட்டின் செழுமையான பகுதியைப் போன்ற அவள் தோள் வேண்டிய இன்பம் தருமே ..
#அய்யன் 1106
/ உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் /
அவளைத் தீண்டி ஒவ்வொருமுறையும் நான் மரணிப்பேன், என்னை மீண்டும் உயிர்ப்பிக்கும் இடமாகிய அவளது தோள்கள் அமிழ்தினால் செய்யப்பட்டவை.
#அய்யன் 1107
/ தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு /
தன் எடையில் ஒரு பங்கு எடையுள்ள உணவை உண்ணக்கூடிய அழகிய பெண் விலங்கின் ஆற்றலுக்கு ஈடாகும் அவளது தீண்டல்.
#அய்யன் 1108
/ வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு /
சூறாவளிக்காற்றும் ஊடுருவ முடியாதபடி இணைந்து மெய்த்தீண்டலில் வீழ்ந்திருக்கும் இருவருக்குமே அது இன்பம் தரும்.
#அய்யன் 1109
/ ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன் /
ஊடலில் துவக்கி, எதற்காக இவ்வூடல் என்றுணர்ந்து, கூடலில் முடிப்பதுதான் காதலில் இணைந்தவர்கள் பெறும் பயன்கள்!
#அய்யன் 1110
/ அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு /
நூற்க முற்படும் போதெல்லாம் சிறுநூல் சிக்கிக் கொள்வதைப்போல அறிய முற்படும் போதெல்லாம் அறியாமையில் சிக்குவதாம் காமம்
Comments