திருக்குறள் அதிகாரம்: 111 காமத்துப்பால் : களவியல் : புணர்ச்சிமகிழ்தல்

புணர்ச்சிமகிழ்தல் :
 
காதலனும் காதலியும் கூடி மகிழ்வுறுவது புணர்ச்சிமகிழ்தல்.அதை வெளிப்படுத்தும் பாக்களாக இவ்வதிகாரத்தில் ...

 

#அய்யன் 1101

/ கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள /

கண் இன்புற அழகும், செவி இன்புற நல்ல குரலும், முகர்ந்து இன்புற நறுமணமும், நாவின்புற அறுசுவையும், தீண்டி இன்புறத் தேகமும் ஒளிரும் வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளது 


 #அய்யன் 1102

/ பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து /

நோய்க்கு மருந்து பிற பொருட்கள். ஆனால் நகையும் ஆடையும் அணிந்தவள் ஏற்படுத்தும் நோய்க்கு , அதைக் களைந்து தானே மருந்தாவாள்.

 

#அய்யன் 1103

/ தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு /

தூக்கத்தில் ஒருவன் தன்னை மறந்து வீழ்ந்து கிடக்கும் அவளின் தோள்களை விடவா இனிது பிரம்மன் படைத்த உலகு.

 

#அய்யன் 1104

/ நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள் /

நெருங்கினால் குளிருவதும் விலகினால் நிலைமாறுவதுமான காம நெருப்பினை உடைய உடலை எப்போது பெற்றாள் இவள் !

 

#அய்யன் 1105

/ வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் /

வேண்டிய பொழுது பூத் தேன் காய் கனி நிழல் நீர் தென்றல் குளிர்ச்சி ஆகியவை தரும் காட்டின் செழுமையான பகுதியைப் போன்ற அவள் தோள் வேண்டிய இன்பம் தருமே ..

 

#அய்யன் 1106

/ உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் /

அவளைத் தீண்டி ஒவ்வொருமுறையும் நான் மரணிப்பேன், என்னை மீண்டும் உயிர்ப்பிக்கும் இடமாகிய அவளது தோள்கள் அமிழ்தினால் செய்யப்பட்டவை. 


#அய்யன் 1107

/ தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு /

தன் எடையில் ஒரு பங்கு எடையுள்ள உணவை உண்ணக்கூடிய அழகிய பெண் விலங்கின் ஆற்றலுக்கு ஈடாகும் அவளது தீண்டல்.


#அய்யன் 1108

/ வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு /

சூறாவளிக்காற்றும் ஊடுருவ முடியாதபடி இணைந்து மெய்த்தீண்டலில் வீழ்ந்திருக்கும் இருவருக்குமே அது இன்பம் தரும்.


#அய்யன் 1109

/ ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்  /

ஊடலில் துவக்கி, எதற்காக இவ்வூடல் என்றுணர்ந்து, கூடலில் முடிப்பதுதான் காதலில் இணைந்தவர்கள் பெறும் பயன்கள்!


#அய்யன் 1110

/ அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு  /

நூற்க முற்படும் போதெல்லாம் சிறுநூல் சிக்கிக் கொள்வதைப்போல அறிய முற்படும் போதெல்லாம் அறியாமையில் சிக்குவதாம் காமம்

Comments