திருக்குறள் அதிகாரம்: 109 காமத்துப்பால் : களவியல் : தகையணங்குறுத்தல்
தகையணங்குறுத்தல் :
தேவதை போன்ற குணமும் அழகும் பொருந்திய பெண்ணால் உறுத்தப்படுத்தல்.
#அய்யன் -1081
/ அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு /
தலைமுடி விரித்து நிற்கும் தேவதையோ , தோகை விரித்து ஆடும் மயிலோ அல்லது கனத்த கூந்தலை உடைய எளிய பெண்ணோ .... எப்படியிருப்பினும் அவளைக் கண்டால் களிப்புறுகின்றது என் மனம்.
#அய்யன் -1082
/ நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து/
என்னைப் பார்ப்பவளை என்னால் பார்க்கமுடியவில்லை. படை கொண்டு தாக்கும் யட்சியின் பார்வையைப் போலுள்ளது அவள் எதிர்ப்பார்வை.
#அய்யன் -1083
/ பண்டறியேன் கூற்றுஎன் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு /
தக்க பெண்ணால் உள்ளமென்னும் போர்க்களத்தில் , இனிது அறிந்துகொண்டேன் , முன்பு நான் அறிந்திராத மரணத்தை.
#அய்யன் -1084
/ கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண் /
எல்லா நல்ல குணங்களும் அமைந்த இப்பெண்ணிடத்தில், பார்ப்பவரின் உயிரை உண்ணும் அழகான கண்ணுள்ளதே.
#அய்யன் -1085
/ கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து /
அழிவோ ,குறிப்போ அல்லது விருப்பமோ... இது மூன்றில் ஏதோவொன்றை உணர்த்தும் பார்வை பெண்களுக்கு உரியது
#அய்யன் -1086
/ கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண் /
வாளைப் போன்ற வளைந்த புருவங்கள் மலையாகத் தோன்றினால், நடுங்கவைக்கும் துன்பம் தராது அவளது கண்கள் ... என்றுமே.
#அய்யன் 1087
/ கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் /
கட்படாம் அணிந்து போர் செய்யும் யானையைக் கண்டு என்னுள்ளம் அஞ்சுவதில்லை. ஆனால் .. மேலாடை அணிந்தும் அடங்காத காமம் சொல்லும் கொங்கையுடையாளைக் கண்டால் ...
#அய்யன் -1088
/ ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு /
போர்க்களத்தில் எதிரிகளும் அஞ்சும் என் பெருமை, இந்தப் பேரழகியின் முன் உடைந்ததும் எனது நன்மைக்கே.
#அய்யன் 1089
/ பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து /
பெண்மான் போன்ற மருண்ட பார்வையும் வெட்கமும் உடைய களங்கமற்ற அழகிற்கு மேலும் நகை எதற்கு ? பொருந்துவதில்லை.
#அய்யன் 1090
/ உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று /
கண்ணால் கண்டாலே போதை தரும் பெண் போன்றதல்ல சாராயம், அது உண்பவர்களுக்கு மட்டுமே இன்பம் தரும்.
Comments