குறுந்தொகை 334 : இளம்பூதனார்
பனியில் உறைந்திருக்கும் பூக்கள் நிறைந்த நீர்நிலைகள் கடலோடு சேர்கின்ற நெய்தல் துறையின் தலைவனாகிய என் காதலன் என்னை விட்டுப் பிரிந்து திரைகடலோடிச் சென்றால் என்னுயிரை இழப்பதன்றி வேறு என்ன செய்வது தோழி. சிறுவெள்ளைக் கடற்காக்கை தனது சிவந்த அலகால் முதுகின் மீது பற்றி வீசும் நீரானது வழிந்து அதன் இருபக்கமும் தான் நனைக்கும். அதைப் போலவே அவன் என்னை விட்டு நீங்கிச் சென்றால் வரும் துன்பமும் இருவருக்குமே தான்.
*தலைவன் பிரிவு குறித்து இரங்குதல்.
குறுந்தொகை 334
சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோ
டெறிதிரைத் திவலை யீர்ம்புற நனைப்பப்
பனிபுலந் துறையும் பல்பூங் கானல்
விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பி னொருநம்
இன்னுயி ரல்லது பிறிதொன்
றெவனோ தோழி நாமிழப் பதுவே.
Comments