புறநானூறு 154 : மோசிகீரனார் - அரிதும் ; எளிதும்
அலை மிகுந்த கடற்கரை வழியாகவே அடிக்கடி சென்றாலும் தெரிந்தவர்களைக் கண்டால் தாகம் தீர்க்கச் சிறிது நன்னீர் கேட்பார்கள் மனிதர்கள். அதைப்போலவே அரசர்களின் அருகிலிருக்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும் எக்குறையுமற்ற வள்ளல்களிடமே செல்வார்கள் புலவர்கள்.