குறுந்தொகை 2 : இறையனார்

குறிஞ்சிப்பூப் பூத்திடும் மலைகளைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்திடும் அழகு சிறகுடைய தும்பியே , உன் விருப்பத்தைச் சொல்லாது கண்ட உண்மையையைச் சொல்வாயா ? கற்றுத்தருதல் நிறைந்த நட்பின் காரணமாகச் சொல் , மயில் போன்ற மென்மையும் அழகான பற்களையும் உடைய இப்பெண்ணின் கூந்தலை விட மணக்கும் பூ தான் உள்ளதோ நீ அறிந்தவரையில் ... 

குறுந்தொகை 2 :

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி !
காமம் செப்பாது, கண்டது மொழிமோ ?
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே

- இறையனார் 

 

Comments