Posts

Showing posts from June, 2021

குறுந்தொகை 3 : தேவகுலத்தார்

வானத்தை விட உயர்ந்ததோ கடலை விடப் பெரியதோ இல்லையெனினும் நிலத்தில் பெரியது இம்மலை. அதைப் போலத்தான் கருங்கால்களை உடைய குறிஞ்சிப் பூக்களிலிருந்து பெருந்தேன் சேகரிக்கும் மலைநாட்டவன் உடனான என் காதலும் இம்மண்ணில் பெரியது ... தோழி

குறுந்தொகை 2 : இறையனார்

குறிஞ்சிப்பூப் பூத்திடும் மலைகளைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்திடும் அழகு சிறகுடைய தும்பியே , உன் விருப்பத்தைச் சொல்லாது கண்ட உண்மையையைச் சொல்வாயா ? கற்றுத்தருதல் நிறைந்த நட்பின் காரணமாகச் சொல் , மயில் போன்ற மென்மையும் அழகான பற்களையும் உடைய இப்பெண்ணின் கூந்தலை விட மணக்கும் பூ தான் உள்ளதோ நீ அறிந்தவரையில் ... 

குறுந்தொகை 1 : திப்புத் தோளார்

போர்க்களம் சென்று பகைவரைக் கொன்றதால் குருதி தோய்ந்த தந்தங்களை உடைய யானை மீது பகைவர் பாய்ச்சிய வலிமையான அம்பினாற் அதன் காலில் அணிந்திருந்த அணிகலன் குருதியோடு கழண்டு விழ உருவான செம்'மலை' போலுள்ளது இச் செங்காந்தள் மலர்க்கொத்து ....

குறுந்தொகை 28 : ஒளவையார்

என்னைக் கொல்லும் இக்காமநோய் அறியாது தூங்கும் இவ்வூரைச் சுழன்று வரும் சூறாவளிக் காற்றென முட்டுவேனோ ... தாக்குவேனோ ... நிலையற்ற நானும் இத்தன்மை வலுப்பெற்று அச்சூறாவளிக் காற்றைப் போல்தான் ஒலி எழுப்புவேனோ .... யாரிடம் நான் சொல்வேன் என் துன்பத்தை ..  

புறநானூறு 242 : குடவாயிற் கீரத்தனார்

வள்ளல் சாத்தன் மறைவை ஒட்டி மக்கள் சோகத்தில் இருப்பதைக் கூறுகிறார் புலவர் ' குடவாயிற் கீரத்தனார் ' முல்லைப்பூவே ... குழந்தைகள் சூடமாட்டார்களே. முதுகு வளைந்த பெரியவர்களும் பறிக்கமாட்டார்கள். தான் இசைக்கும் யாழினைக் கொண்டு பிடித்திழுத்து இசைபாணனும் சூடிக்கொள்ள மாட்டான். தமிழ் கொண்டு பாடும் பாடினியும் பறித்து அணியமாட்டாள். ஆண்மையோடு படைகளை வென்ற வலிய வேல் போன்ற சாத்தன் மாண்ட பின் பூத்தாயே ஒல்லையூர் நாட்டிலே ....