குறுந்தொகை 7 : பெரும்பதுமனார்

" போர்வீரன் காலில் *கழலும் , தோளில் *தொடியணிந்த இப்பெண்ணின் மெல்லிய  காலில் சிலம்பும் இருக்கிறது. இந்த நல்லவர்கள் யாரோ ? ஒன்றாக வருவதால் ஒருவருக்கொருவர் அன்புடையவர்கள் என்று மட்டும் தெரிகிறது. ஆரியரின் நூல் போன்ற கயிற்றில் தொங்கும் பறையில் காற்று நுழைந்து சுழற்றியடித்ததைப் போலக்  கலங்கிப்போயுள்ளனர் இருவரும் . வாகை மரத்தின் உச்சியிலுள்ள வெண்ணிற விதையுடைய *நெற்றை உடைக்கின்ற  வெயில் புழங்கும் பாலை நிலம் நோக்கிச் செல்கின்றனரே .... " என்று கையறு நிலையில் செல்லும் இணையரைப் பார்த்து வருந்திய யாரோ சொல்லியது ... 
 
 
குறுந்தொகை 7 : பெரும்பதுமனார்


வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார்கொ லளியர் தாமே யாரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயி லழுவ முன்னி யோரே.
 
 
 
கழல் - [ ஆண்கள் அணியும் சிலம்பு / மற்றும் செருப்பு]
தொடி - [ பெண்கள் தோளில் அணியும் அணிகலன் ]
நெற்று - [ மேல்தோல் / விதையுடைய காய் எ.க.  நிலக்கடலை நெற்று ] 
அழுவம் - [ பரந்த நிலம் / மலை - பாலை ]  
தொலி - தோலை உரித்தல் / ஒலி - ஓசை
 
 
 
 

Comments