குறுந்தொகை 8 : ஆலங்குடி வங்கனார்

நீர் நில்லாது ஓடும் 'கழனி நில மா மரத்திலிலிருந்து' அருகிலிருக்கும் பழையநீர் தேங்கி நிற்கும் வயலில் விழுந்த பழத்தின் பழுத்த கன்னங்களைக் கடிக்கும் வாளை மீன் போன்ற தலைவன் இங்கு என்னிடத்தில் எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டுத் தனது வீட்டிலே கையும்

காலும் தூக்குவதற்கு ஏற்ப ஆடும் பொம்மலாட்டப் பாவை போல் தன் தாய் சொல்வதைத்தான் செய்வான் .... 

 

குறுந்தொகை 8 : ஆலங்குடி வங்கனார்

 

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே

 

Comments