Posts

குறுந்தொகை 8 : ஆலங்குடி வங்கனார்

நீர் நில்லாது ஓடும் 'கழனி நில மா மரத்திலிலிருந்து' அருகிலிருக்கும் பழையநீர் தேங்கி நிற்கும் வயலில் விழுந்த பழத்தின் பழுத்த கன்னங்களைக் கடிக்கும் வாளை மீன் போன்ற தலைவன் இங்கு என்னிடத்தில் எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டுத் தனது வீட்டிலே கையும்

குறுந்தொகை 7 : பெரும்பதுமனார்

" போர்வீரன் காலில் *கழலும் , தோளில் *தொடியணிந்த இப்பெண்ணின் மெல்லிய  காலில் சிலம்பும் இருக்கிறது. இந்த நல்லவர்கள் யாரோ ? ஒன்றாக வருவதால் ஒருவருக்கொருவர் அன்புடையவர்கள் என்று மட்டும் தெரிகிறது.

குறுந்தொகை 6 : பதுமனார்

சொற்கள் தீர்ந்துபோய் எவ்வித விருப்பும் வெறுப்புமின்றி மக்கள் இனிது உறங்கிக் கொண்டிருக்கின்றனர் நள்ளிரவில். பாதி உலகமும் அவ்வாறே ...

குறுந்தொகை 5 : நரிவெரூஉத் தலையார்

அதுவோ தோழி , அதுதான் காதல். சேற்றில் திரியும் குருகு பறவைகள் தூங்குவதற்கு நிழல் தரும் புன்னை மரங்கள் நிறைந்த கடலும் ஆறும் சேரும் கழியின் உப்புநீர்,  நெய்தல் தலைவன் உன்னைத் தனித்துவிட்டுப் பிரிந்தானானென உனது இமையில் திரண்ட கண்ணீருக்கு ஒப்பாகாது ...

குறுந்தொகை 4 : காமஞ்சேர் குளத்தார்

வருந்துமே என் நெஞ்சம். கண்ணிமைகளை எரிப்பது போலத் துன்புற்றுக் கண்ணீர் தேங்கி நிற்பதற்குக் காரணமான காதலரின் பிரிவால் வருந்துமே

குறுந்தொகை 3 : தேவகுலத்தார்

வானத்தை விட உயர்ந்ததோ கடலை விடப் பெரியதோ இல்லையெனினும் நிலத்தில் பெரியது இம்மலை. அதைப் போலத்தான் கருங்கால்களை உடைய குறிஞ்சிப் பூக்களிலிருந்து பெருந்தேன் சேகரிக்கும் மலைநாட்டவன் உடனான என் காதலும் இம்மண்ணில் பெரியது ... தோழி

குறுந்தொகை 2 : இறையனார்

குறிஞ்சிப்பூப் பூத்திடும் மலைகளைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்திடும் அழகு சிறகுடைய தும்பியே , உன் விருப்பத்தைச் சொல்லாது கண்ட உண்மையையைச் சொல்வாயா ? கற்றுத்தருதல் நிறைந்த நட்பின் காரணமாகச் சொல் , மயில் போன்ற மென்மையும் அழகான பற்களையும் உடைய இப்பெண்ணின் கூந்தலை விட மணக்கும் பூ தான் உள்ளதோ நீ அறிந்தவரையில் ...