Posts

Showing posts from 2021

குறுந்தொகை 8 : ஆலங்குடி வங்கனார்

நீர் நில்லாது ஓடும் 'கழனி நில மா மரத்திலிலிருந்து' அருகிலிருக்கும் பழையநீர் தேங்கி நிற்கும் வயலில் விழுந்த பழத்தின் பழுத்த கன்னங்களைக் கடிக்கும் வாளை மீன் போன்ற தலைவன் இங்கு என்னிடத்தில் எல்லாவற்றுக்கும் தலையாட்டிவிட்டுத் தனது வீட்டிலே கையும்

குறுந்தொகை 7 : பெரும்பதுமனார்

" போர்வீரன் காலில் *கழலும் , தோளில் *தொடியணிந்த இப்பெண்ணின் மெல்லிய  காலில் சிலம்பும் இருக்கிறது. இந்த நல்லவர்கள் யாரோ ? ஒன்றாக வருவதால் ஒருவருக்கொருவர் அன்புடையவர்கள் என்று மட்டும் தெரிகிறது.

குறுந்தொகை 6 : பதுமனார்

சொற்கள் தீர்ந்துபோய் எவ்வித விருப்பும் வெறுப்புமின்றி மக்கள் இனிது உறங்கிக் கொண்டிருக்கின்றனர் நள்ளிரவில். பாதி உலகமும் அவ்வாறே ...

குறுந்தொகை 5 : நரிவெரூஉத் தலையார்

அதுவோ தோழி , அதுதான் காதல். சேற்றில் திரியும் குருகு பறவைகள் தூங்குவதற்கு நிழல் தரும் புன்னை மரங்கள் நிறைந்த கடலும் ஆறும் சேரும் கழியின் உப்புநீர்,  நெய்தல் தலைவன் உன்னைத் தனித்துவிட்டுப் பிரிந்தானானென உனது இமையில் திரண்ட கண்ணீருக்கு ஒப்பாகாது ...

குறுந்தொகை 4 : காமஞ்சேர் குளத்தார்

வருந்துமே என் நெஞ்சம். கண்ணிமைகளை எரிப்பது போலத் துன்புற்றுக் கண்ணீர் தேங்கி நிற்பதற்குக் காரணமான காதலரின் பிரிவால் வருந்துமே

குறுந்தொகை 3 : தேவகுலத்தார்

வானத்தை விட உயர்ந்ததோ கடலை விடப் பெரியதோ இல்லையெனினும் நிலத்தில் பெரியது இம்மலை. அதைப் போலத்தான் கருங்கால்களை உடைய குறிஞ்சிப் பூக்களிலிருந்து பெருந்தேன் சேகரிக்கும் மலைநாட்டவன் உடனான என் காதலும் இம்மண்ணில் பெரியது ... தோழி

குறுந்தொகை 2 : இறையனார்

குறிஞ்சிப்பூப் பூத்திடும் மலைகளைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்திடும் அழகு சிறகுடைய தும்பியே , உன் விருப்பத்தைச் சொல்லாது கண்ட உண்மையையைச் சொல்வாயா ? கற்றுத்தருதல் நிறைந்த நட்பின் காரணமாகச் சொல் , மயில் போன்ற மென்மையும் அழகான பற்களையும் உடைய இப்பெண்ணின் கூந்தலை விட மணக்கும் பூ தான் உள்ளதோ நீ அறிந்தவரையில் ... 

குறுந்தொகை 1 : திப்புத் தோளார்

போர்க்களம் சென்று பகைவரைக் கொன்றதால் குருதி தோய்ந்த தந்தங்களை உடைய யானை மீது பகைவர் பாய்ச்சிய வலிமையான அம்பினாற் அதன் காலில் அணிந்திருந்த அணிகலன் குருதியோடு கழண்டு விழ உருவான செம்'மலை' போலுள்ளது இச் செங்காந்தள் மலர்க்கொத்து ....

குறுந்தொகை 28 : ஒளவையார்

என்னைக் கொல்லும் இக்காமநோய் அறியாது தூங்கும் இவ்வூரைச் சுழன்று வரும் சூறாவளிக் காற்றென முட்டுவேனோ ... தாக்குவேனோ ... நிலையற்ற நானும் இத்தன்மை வலுப்பெற்று அச்சூறாவளிக் காற்றைப் போல்தான் ஒலி எழுப்புவேனோ .... யாரிடம் நான் சொல்வேன் என் துன்பத்தை ..  

புறநானூறு 242 : குடவாயிற் கீரத்தனார்

வள்ளல் சாத்தன் மறைவை ஒட்டி மக்கள் சோகத்தில் இருப்பதைக் கூறுகிறார் புலவர் ' குடவாயிற் கீரத்தனார் ' முல்லைப்பூவே ... குழந்தைகள் சூடமாட்டார்களே. முதுகு வளைந்த பெரியவர்களும் பறிக்கமாட்டார்கள். தான் இசைக்கும் யாழினைக் கொண்டு பிடித்திழுத்து இசைபாணனும் சூடிக்கொள்ள மாட்டான். தமிழ் கொண்டு பாடும் பாடினியும் பறித்து அணியமாட்டாள். ஆண்மையோடு படைகளை வென்ற வலிய வேல் போன்ற சாத்தன் மாண்ட பின் பூத்தாயே ஒல்லையூர் நாட்டிலே ....

புறநானூறு 154 : மோசிகீரனார் - அரிதும் ; எளிதும்

அலை மிகுந்த கடற்கரை வழியாகவே அடிக்கடி சென்றாலும் தெரிந்தவர்களைக் கண்டால் தாகம் தீர்க்கச் சிறிது நன்னீர் கேட்பார்கள் மனிதர்கள். அதைப்போலவே அரசர்களின் அருகிலிருக்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும் எக்குறையுமற்ற வள்ளல்களிடமே செல்வார்கள் புலவர்கள்.

புறநானூறு 134 : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

கடையேழு வள்ளல்களில் ஒருவரான 'ஆய் அண்டிரன்' குறித்து 'உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்'.  இப்பிறவியில் செய்தது மறுபிறவியில் நன்மை பயக்கும் என்று அறத்திற்கு விலை வைத்திடும் வணிகன் அல்ல எம் தலைவன் 'ஆய் அண்டிரன்'. மற்றவர்களும் சான்றோரும் செய்தார்கள் என்பதற்காகவோ வள்ளல் தன்மை காட்டுவதற்காகவோ அவன் கொடுப்பதில்லை. [ பிறர் துன்பம் காணச் சகிக்காது எப்பலனும் எதிர்பாராது உள்ளமுவந்து கொடுப்பான் ]

நாலடியார் 120 :

ஆராய்ந்து பார்த்தால் மரணத்தின் பொழுது ஒருவன் தான் செய்த செயலின் புகழ் அல்லாது வேறொன்றை எடுத்துச் செல்வதில்லை. போற்றி வளர்த்த உடலும் பயனற்றது தான்.

குறுந்தொகை 399 : பரணர்

ஊருக்கு நீர்வழங்கும் குளத்தின் மேற்பரப்பில் போர்த்தியிருக்கும் பாசி போன்றது 'பசலை' என்னும் இக்காதல் நோய். காதலன் தொடும்பொழுதெல்லாம் நீங்கி, அவர் என்னை விட்டு விலகிச் செல்லும் போதெல்லாம் மீண்டும் பரவுகின்றதே ....

நற்றிணை 217 : கபிலர்

புகழ் பெற்று வாழ்பவரின் செல்வத்தைப் போலக் காணுமிடத்திலெல்லாம் ஒளிரும் யானை, கருமையான வலிய புலியென அஞ்சி அருகிலுள்ள கரும் பால் வடியும் வேங்கை மரத்தில் விரைவாய் முட்டிமோதி மயங்கித் தன் சினம் தணிக்கும். நம் மலையரசன் மிக இனிமையானவன் தான் என்றாலும் அவன் அச்சப்படும் வகையில் பொய்க்கோபம் கொண்டு ஊடல் கொள்வேன் தோழி.

குறுந்தொகை 42 : கபிலர்

நடுசாமத்தில் தோன்றிப் பொழியும் மாமழையானது அருவியாய்ப் பாய்ந்து விலகும் மலைகளை உடைய அரசே, இரவினில் உன் காமம் தீர்ந்ததும் நீயும் விலக்கிவிடுவாயோ .. 

நாலடியார் 393 :

உழவர்கள் தங்கள் கருவிகளை ஒதுக்கி வைக்கும்படி மயக்கம் தரும் இம்மாலை வேளையில் மலர்களைக் கொய்து மாலை கோர்த்தவள், துணை இல்லாதவர்க்கு இம்மாலைப் பொழுது என்ன செய்துவிடுமென்று எண்ணிக் கையிலிருக்கும் மாலையை வீசிக் கலங்கினாள்.

நாலடியார் 126

சான்றோர் என மதித்துச் சேர்ந்தோரிடத்தில் அத்தன்மை இல்லையெனில் கவலைப்படாதே .. சந்தனம் இரு க்குமென்று திறந்த பெட்டியில் பாம்பு கண்டவன் கதையுமுண்டு இங்கு.

குறுந்தொகை 119 : சத்திநாதனார்

சிறிய மேல்வாயில் முளைத்த வாள் போலத் தோன்றும் கூரிய பற்களை உடையவளின் வளையல் அணிந்த கைகள், வெள்ளை நிற வரிகளையுடைய அடிக்கட்டுகள் கொண்ட  சிறுபாம்பைக் கண்டு பலம் பொருந்திய காட்டியானை அஞ்சுவதைப் போல என்னுள் அச்சமூட்டுகின்றன ...

நாலடியார் 71 :

பூமாலை போலக் கொட்டும் அருவியால் குளிரும் மலைகளை உடைய மன்னா ... முட்டாளோடு எதையும் சொல்லாதே . அவ்வாறு சொல்ல  நேர்ந்தால் முழுவதையும் சொல்லிவிடாதே. பொருத்தமான வழியில் முட்டாளிடமிருந்து விலக்கிக் கொள்வதே சால நன்று.

நாலடியார் 17 :

தோட்டத்தில் பயன் தந்த மரங்களெல்லாம் பனிகாலத்தில் பழங்களை இழந்து பட்டுப்போவதைப் போன்றது இளமை. வேல் போன்ற கூரிய விழியாள் என்று நீ இவளை மிகவும் விரும்பினால் , ஒரு நாள் இவளும் கண் தெரியாமல் ஆகிச் சிறுகோலின் உதவியுடன் நடந்து செல்லும் கிழவியாகும் காலமும் வரும் . இளமையும் அழகும் நிலையற்றது  ...

குறுந்தொகை 157 : அள்ளூர் நன்முல்லையார்

குக்கூவென்று கோழி கூவியத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுத் துடித்தது என் நெஞ்சம். வாள்  போலத் தோன்றும் விடியல் ஒளிக்கீற்று வந்துவிட்டால் என் தோளோடு தோள் சேர்ந்திருக்கும் காதலனை என்னிடத்திலிருந்து பிரித்துவிடுமே .... எனவே ..

சிறப்புப் பாயிரம் : தொல்காப்பியம்

தராசின் இயல்பென்பது நிறுத்தும் வேளையில் அளவு குறையாமலும் நிறையாமலும் , ஐயத்தை நீக்கி நடுநிலைமையோடு இருத்தலும் எனக் கூறுவர் அதன் இயல்பறிந்தோர் .....

குறுந்தொகை 334 : இளம்பூதனார்

பனியில் உறைந்திருக்கும் பூக்கள் நிறைந்த நீர்நிலைகள் கடலோடு சேர்கின்ற நெய்தல் துறையின் தலைவனாகிய என் காதலன் என்னை விட்டு ப் பிரிந்து திரைகடலோடிச் சென்றால் என்னுயிரை இழப்பதன்றி வேறு என்ன செய்வது தோழி. சிறுவெள்ளைக் கடற்காக்கை தனது சிவந்த அலகால் முதுகின் மீது பற்றி வீசும் நீரானது வழிந்து அதன் இருபக்கமும் தான் நனைக்கும். அதைப் போலவே அவன் என்னை விட்டு நீங்கிச் சென்றால் வரும் துன்பமும் இருவருக்குமே தான்.